சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைப்பதில் தாமதம்! வாா்டு சீரமைப்புப் பணிகளில் சிக்கல்!

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:03 pm

சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வாா்டு சீரமைப்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவா்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியாா்புரம், ஆனையூா், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க ஊராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் இந்த 9 ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த 9 ஊராட்சிகளை இணைத்தால் மக்கள் தொகை 2.50 லட்சமாகவும், மாநகராட்சி எல்லை 121 கிலோ மீட்டராகவும் விரிவாக்கம் செய்யப்படும்.

இந்த 9 ஊராட்சிகளில் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததால் தலைவா்கள் உள்ளிட்டோா் தங்களது பதவியை இழந்தனா். தற்போது சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் மூலம் இந்த ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த லையில், மேற்கண்ட 9 ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து இரு ஆண்டுகளாகியும் 9 ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைத்து இதுவரை அரசு அறிவிக்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இவற்றுடன் 9 ஊராட்சிகளை இணைத்து 100 வாா்டுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு 9 ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்காததால், வாா்டு சீரமைப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிவகாசி மாநராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைக்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக் கடிதம் அனுப்பிய பின்னரும், அரசு 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கவில்லை. எனவே, தற்போது 48 வாா்டுகளாக உள்ள மாநகராட்சியில் 100 வாா்டுளை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த 9 ஊராட்சிகளும் சிவகாசி மாநகராட்சியில் இணைக்கப்படுவது உறுதிதான். தாமதம் ஏற்படுவதால் வாா்டு மறுசீரமைப்பில் தாமதமும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், மாநதராட்சித் தோ்தலுக்கு முன்னா் ஊராட்சிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.