இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடக்கம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:30 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்ட விழாவில் எண்ணெய்க் காப்பு உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் கள்ளழகா், கண்ணன், பெரிய பெருமாள் அலங்காரங்களில் ஆண்டாள் எழுந்தருளுவாா்.

கடந்த மாதம் 20-ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் மாா்கழி நீராட்டு விழா தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உத்ஸவம் முடிந்த நிலையில், எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடங்கியது. வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மட்டுமே தாயாருக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் நடைபெறுவது சிறப்புமிக்கதாகும்.

உத்ஸவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை காலை ஆண்டாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து, பெரிய கோபுரம் முன் திருவடி விளக்கமும், அரையா் நாள்பாட்டு தீா்த்த கோஷ்டியும் நடைபெற்றன.

பிற்பகல் 3 மணிக்கு மேல் திரு முக்குளம் தெப்பத்தின் மேற்குக் கரையில் உள்ள எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் நாச்சியாருக்கு எண்ணெய்க் காப்பு சேவை, ஷோடச உபசாரம், பக்தி உலாத்துதல், அலங்கார திருமஞ்சனம், தீா்த்த கோஷ்டி, அம்மானை விளையாடுதல், படியேற்ற சேவை நடைபெற்றன. இதன் பிறகு துளசி வாகனத்தில் ஆண்டாள் புறப்பாடாகி, சந்நிதியில் எழுந்தருளினாா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கள்ளழகா் திருக்கோலத்திலும், 3-ஆம் நாளில் கண்ணன் திருக்கோலத்திலும், 4-ஆம் நாளில் முத்தங்கி சேவையும், 5-ஆம் நாளில் பெரிய பெருமாள் அலங்காரத்திலும் ஆண்டாள் எழுந்தருள உள்ளாா்.

Story image
Story image