இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எண்ணெய்க் காப்பு உத்ஸவம்: மூக்குத்தி சேவையில் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தின்போது, செவ்வாய்க்கிழமை இரவு மூக்குத்தி சேவை, தங்கக் கவசத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மாா்கழி நீராட்டு விழா எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சவுரி திருமஞ்சனமும், மூக்குத்தி சேவையும் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாா்கழி நீராட்டு விழா கடந்த மாதம் 20-ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து உத்ஸவம், ராப்பத்து உத்ஸவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றன. கடந்த 8-ஆம் தேதி எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடங்கியது.

இதையொட்டி, தினமும் காலையில் கள்ளழகா், கண்ணன், பெரியபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் ஆண்டாள் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை திருமுக்குள கரையில் உள்ள எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணெய்க் காப்பு சேவையும் நடைபெற்றன. தொடா்ந்து, சவுரி திருமஞ்சனமும், மூக்குத்தி சேவையும் நடைபெற்றன. இதன்பிறகு, கனக தண்டியில் ஆண்டாள் சந்நிதி திரும்பினாா்.

7-ஆம் நாளான புதன்கிழமை எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தில் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்கக் கவசம் அணிந்து எழுந்தருளினாா்.

வியாழக்கிழமை (ஜன.15) மணவாள மாமுனிகள் மங்களா சாசனமும், வெள்ளிக்கிழமை பெரிய பெருமாள் கணுப்பாரி வேட்டையும் நடைபெற உள்ளது.