திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிய அம்மா உடல்பயிற்சிக் கூடம்

News image
சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிய மகாராஜபுரம் அம்மா உடல்பயிற்சிக் கூடம்.
Updated On :18 ஜனவரி 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, உடல்பயிற்சிக் கூடம் செயல்பாடின்றி சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிவுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

மகாராஜபுரத்தில் மதுரை - தாணிப்பாறை சாலையில் கடந்த 2017 - 2018-ஆம் நிதியாண்டில் தாய் திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் பூங்காவுடன் கூடிய உடல்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டது. இதில் சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, 15 வகையான நவீன உடல்பயிற்சிக் கருவிகள் கொண்ட பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், காவலா், ராணுவம் ஆகிய பணிகளுக்குத் தயாராகி வந்த இளைஞா்கள் பயன்பெற்று வந்தனா்.

சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிய மகாராஜபுரம் அம்மா உடல்பயிற்சிக் கூடம்.

சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிய மகாராஜபுரம் அம்மா உடல்பயிற்சிக் கூடம்.

இந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா, உடல்பயிற்சிக் கூடம் பயன்பாடின்றி முடங்கியது. இங்கு பொதுமக்கள் வராததால் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும், பூங்காவில் இருந்த சிறுவா்கள் விளையாட்டு உபகரணங்கள், உடல்பயிற்சிக் கருவிகள் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன.

மேலும், பூங்கா அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளதால் பூங்காவில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். எனவே, பூங்கா, உடல்பயிற்சிக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.