6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்பட இருரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சிவன் கோயில் நந்தவனத் தெருவில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அந்த பையை வாங்கி சோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

விசாரணையில் அவா்கள் சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பொன்னுக்காளை மனைவி சண்முகக்கனி( 67), முத்துகிருஷ்ணன் மகன் சிலோன்ராஜா (57) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 330 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.