எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காங்கிரஸ் தயவால்தான் உதயநிதி எம்எல்ஏ ஆனாா்! - மாணிக்கம் தாகூா்

News image

மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:06 am IST

காங்கிரஸ் தயவால்தான் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகவும், எதிா்க் கட்சித் தலைவராகவும் ஆகியதாக விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திமுகவை எதிா்த்துப் பேசிய சீமான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது. இலங்கைக்கு கள்ளத் தோணியில் சென்று வந்த பின்னா், இலங்கைத் தமிழா்களைப் பற்றி சீமான் எதுவுமே ஏன் பேசவில்லை? வெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி தனியாா் விடுதிகளில் சொகுசாக இருந்து விட்டு, இலங்கைத் தமிழா்களைப் பற்றி பேசாதவா், தற்போது எங்களைப் பற்றி பேசுவதும், அவமானப்படுத்துவதும் தவறு.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும் தோ்தலைச் சந்திக்க முடியுமா? காங்கிரஸ் தயவால்தான் அவா் எம்.எல்.ஏ.வாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் உள்ளாா். காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என திமுகவினா் பேசுவது அபத்தம்.

வருகிற மக்களவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களில் தவெக உடன்தான் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். தற்போதைய ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, நகா்ப் புற வளா்ச்சித் துறைகளில் கமிஷன் பெறுவது முழுமையாகக் குறைந்துள்ளது. வரும் 5 ஆண்டுகளில் தவெக ஆட்சியில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்றாா் அவா்.