மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 4:54 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி ஞாயிறுக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரை அடுத்த சொக்கநாதன்புத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (33). செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சொக்கநாதன்புத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வாகனம் நிலை தடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.