கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்த ராமையா நாடாா் மகன் வன்னியராஜன் (59). இவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா். இவருக்கு இரு மகன்கள் உள்ளனா்.

இவருடைய இளைய மகன் ஸ்ரீராம் மதுரையில் உள்ள தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் மீண்டும் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டாா். இவரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, வன்னியராஜன் மீண்டும் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

சங்கரன்கோவில் முக்கு அருகே வந்த போது, குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் வன்னியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சொக்கநாதன்புத்தூா் காமராஜா்நகரைச் சோ்ந்த சிவனனைந்த பெருமாள் (53) மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.