/
ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமியாபுரம் பகுதியில்
தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் பாண்டியராஜன் (41) என தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 18 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

