விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:35 pm

Syndication

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமியாபுரம் பகுதியில்

தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் பாண்டியராஜன் (41) என தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 18 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.