விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கலை: கோட்டையைவிட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி...

கிராமியக் கலைகள் பலவற்றின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலும்,அவற்றில் வித்தியாசமாக சுடலை மாடசாமி நடனம் எனப் புதுமையான ஒன்றைச் செய்து,தேசிய அளவில் இரு முறை விருதுகளை வென

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:42 am

வை. இராமச்சந்திரன்

கிராமியக் கலைகள் பலவற்றின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலும்,அவற்றில் வித்தியாசமாக சுடலை மாடசாமி நடனம் எனப் புதுமையான ஒன்றைச் செய்து,தேசிய அளவில் இரு முறை விருதுகளை வென்றவர் எம்.எஸ்.இளங்கோ. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரைச் சேர்ந்த இவர், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதுவரை சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமியக் கலை

நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் விலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்:

கிராமியக் கலை மற்றும் சமூக சேவையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

12-ம் வகுப்புவரை மட்டுமே படித்த எனக்கு, பள்ளி பருவத்திலே கலைநிகழ்ச்சிகள் மூலம் கல்வி,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தாக்கம் இருந்தது. எந்த ஒரு செயலும் சாமான்ய மக்களிடம் எளிதில் சென்றடைய உதவியாக இருப்பது இந்தக் கிராமியக்கலை. சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலை உணர்வை ஊட்டியதில் கிராமியக் கலைக்கும் அதிக பங்குண்டு. கிராமிய கலைகள் மூலமே தேசிய ஒருமைப்பாடு,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்த முடியும். அரசின் நலத்திட்டங்களைக் கூட கிராமியக்கலையினால் மட்டுமே மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்ததால் கிராமியக் கலையைத் தேர்ந்தெடுத்தேன். அதில் என்னை வளரச் செய்தது ஆலங்குளம் கலைவாணர் கலைமன்றம் மற்றும் திருநெல்வேலி நேரு இளையோர் மையம்.

கிராமியக் கலை என்றால் எந்தவிதமான நிகழ்ச்சிகள் செய்கிறீர்கள்?

கிரா மிய நட னங் களான ஒயிலாட்டம்,கோலாட்டம், கும்மியாட்டம், சக்கைக்குச்சி நடனம், பறையாட்டம், களியல் நடனம் போன்றவற்றைச் செய்கிறேன். கிராம மக்களின் இஷ்ட தெய்வங்களில் ஒன்றான சுடலைமாடசாமியின் தோற்றத்தில் வந்து, நடனமாடி குறிசொல்வது போன்று புதுமையாகச் செய்கிறேன்.

இந்த நடனத்திற்காக, நேரு இளையோர் மையம் சார்பில் 1998-ல் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் கலைவிழாவில் முதல் பரிசும்,1999-ல் லக்னோவில் நடைபெற்ற கலைவிழாவில் இரண்டாம் பரிசும் பெற்றேன். மாநில அளவில் 1997-ல் நாடகம், வில்லுப் பாட்டு, ரங்கோலி ஆகியவற்றில் முதல் பரிசுகளைப் பெற்றுள்ளேன். கிராமிய நடனப் போட்டியில், 1998-ல் சேலத்தில் நடந்த போட்டியில் முதல் பரிசும்,1999ல் கோவையில் நடந்த போட்டியில் முதல் பரிசும் பெற்றேன். 1998ல் மாவட்ட அளவில் சிறந்த இளையோர் விருதும்,2009-ல் சிறந்த கிராமிய நடனக் கலைஞர் விருதும் பெற்றுள்ளேன்.

அழிந்து வரும் கிராமியக் கலை வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

மேற் கத் திய கலாச் சார நட னத் தில் உள்ள ஆர்வம் கிராமிய கலைகளில் பலருக்கு ஏற்படுவதில்லை. அரசு விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்குவது போல,கிராமியக் கலையில் தேசிய அளவில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கும் கல்வி,வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தால் கிராமியக் கலை புதிய எழுச்சிபெறும்.

சமூக சேவையில் உங்கள் ஈடுபாடு பற்றி?

திரு நெல்வேலி அரும் பு கள் அறக்கட்டளை மற்றும் பெங்களூர் அசோகா சுற்றுச்சூழல் இயல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தே செய்து வருகிறேன். எய்ட்ஸ்,சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், ரத்ததானம்,மனித உரிமைகள்,விலங்கினங்கள், பருவ காலமாற்றங்கள் ஆகியன குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை செய்து வருகிறேன். சுமார் 7 மாவட்டங்களில் 150 கிராமங்களில், அக்கிராமங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்.

நீங்கள் பயிற்றுனராகப் பணிபுரிந்தது பற்றி?

கிராம வனக் கு ழுக் க ளுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத் திட்டம் மற்றும் பறவைகள் பாதுகாப்பு குறித்தும், மகளிர் குழுக்களுக்கு முழு சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும்,பல்வேறு தரப்பினருக்கு எய்ட்ஸ் குறித்தும்,மீனவ குழுக்களுக்கு ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் திட்டம் குறித்தும்,152 ஊராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து ராஜ் திட்டம் குறித்தும் ,குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்தும் பயிற்சிகள் அளித்துள்ளேன்.

இதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகள்?

சமூக நல் லி ணக்க இளையோர் தலைமையுத்துவ பயிற்சி, ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் முழுசுகாதாரம் குறித்த பயிற்சி, தொண்டு நிறுவனங்கள் செயல்பாடுகள் குறித்த பயிற்சி, மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில், ஊராட்சி தலைவர்களின் பணிகள் குறித்த பயிற்சி,திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கூட்டு வன மேலாண்மை பயிற்சி ஆகியன பெற்றுள்ளேன்.

சமூக பணிகள் அவசியம்?

நாட் டின் பாது காப் புக்கு இரா ணு வம் எப்படி அவசியமோ, அதே போல சமத்துவ சமுதாயம் உருவாக சமுதாய பணி அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.