சின்னச் சின்ன விஷயங்களில்கூட இந்த கவனம், அவர்களுக்கு இருக்கிறது. உணவகங்கள் ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும் பகுதிகளில், மரத்தையும் செடியையும் சுற்றியுள்ள பகுதியில் மண்ணைப் பார்த்தபோது அது வேறு மாதிரியாகத் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தால் மண் மீது, மரச் சக்கைகளை, தச்சுக் கழிவுகளை பரப்பியிருக்கிறார்கள். அவை மண்ணில் இறங்கியது போக எஞ்சிய உபரி நீரை உறிஞ்சிக் கொண்டு விடுகின்றன. தண்ணியில்லாதபோதும் செடிக்கு, இந்த சக்கைகளிலிருந்து நீர் கிடைக்க முடியும். தண்ணீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இப்படிச் சூழல் பராமரிப்பு பற்றிய ஒரு நுட்பமான கவனம் அங்கே செயல்படுகிறது.