சட்டைப் பித்தான்கள் சட்டையின் அலங்காரப் பொருளாக மட்டுமல்ல, அரசு ரகசியங்கள் அனுப்பும் சாதனமாகவும் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 1545 - ஆம் ஆண்டில் பிரெஞ்சு மன்னர், இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின் அதிகாரிகளுக்கு ரகசியமான இரண்டு கடிதங்களைப் பட்டு நூலில் வைத்துத் தைக்கப்பட்ட இரண்டு பொத்தான்களின் உள்ளே வைத்து அனுப்பினாராம்.