""அப்பா ராகம், ஓசை, தாளம், ரிதம் இதுல மூழ்கிட்டா வார்த்தைகள் எதுவாயிருந்தா என்ன? நா நெல்லை மாவட்டம் கரிவலம் அருகே சென்னிகுளத்துல பிறந்தவன். எங்க ஊர்க்காரங்க எல்லாருக்குமே தமிழிசைன்னா உசுரு, காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஊரது. காவடிச் சிந்துன்னு புதிய சந்தத்தை தமிழுக்கே அறிமுகம் செய்தவரு, அவருக்கு முன்னயும் யாரும் இப்படி பாடலை, பின்னாலயும் முயற்சி பண்ணவங்களாலயும் முடியல, அண்ணாமலை ரெட்டியார் சந்தச் சிகரம். எங்க ஊர்ல சங்கீதம் தெரியாதவங்க கூட காவடிச் சிந்து பாடல்களைப் பாடுவாங்க. "பாடுறவன் பாடிட்டா பசுமாடே தலையாட்டுமுன்னு விளாத்தி