மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இமெயில்!

உண்மையான அறிவியல் அமைத்துத் தரும் சுதந்திரம் மட்டுமே நமக்குப் புதிய விதிகள், கருத்துகள், புதிய கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்குகிறது. அக்கண்டுபிடிப்புகள் பிரச்னைகளை அடையாளம் காண உதவுகின்றன.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


உண்மையான அறிவியல் அமைத்துத் தரும் சுதந்திரம் மட்டுமே நமக்குப் புதிய விதிகள், கருத்துகள், புதிய கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்குகிறது. அக்கண்டுபிடிப்புகள் பிரச்னைகளை அடையாளம் காண உதவுகின்றன.

அதிலிருந்தே நமது ஆரோக்கியம், நமது நாடு, நமது உலகம் ஆகியவற்றுக்குத் தேவையான உண்மையான தீர்வுகள் பிறக்கின்றன.

அலுவலகங்களுக்கிடையேயான தகவல் தொடர்பிற்கான காகிதப் போக்குவரத்தில் உழன்று கிடந்த ஊழியர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைந்ததே என் இமெயில் கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பு அவர்களைப் பல சுமைகளிலிருந்து விடுதலை அடையச் செய்தது.

விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மட்டும்தான் என்றிருந்த கணினி, இமெயில் கண்டுபிடிப்பிற்குப் பிறகு சாமானியர்களைத் தட்டச்சு எந்திரங்களிலிருந்து எழுத்துரு பலகை (கீ போர்டு)க்கு மாற அனுமதித்தது.

பதினான்கு வயது தமிழ் - இந்தியக் குடியேறிச் சிறுவன் - முகவூர் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் பேரன், மேற்சொல்லப்பட்ட செயலாளர்களை ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. என்னைப் பொருத்தவரை அவர்கள் என் பாட்டன்மார்களைப் போலவே உழைக்கும் மக்கள். அவர்களைத் தொழில்நுட்பம் மூலம் விடுவிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவே.

தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மக்களை நாம் தினமும் எப்படிப் பழக்கி வருகிறோம் என்பவைதான், நாம் இன்னும் கலியுகத்திலேயே இருந்து கொண்டிருக்கிறோமா என்பதைத் தீர்மானிக்கும்.

விஜய் ராணிமைந்தன் எழுதிய "இமெயில் தமிழன்' என்ற நூலிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.