இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சமையல் டிப்ஸ்....

கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசி அதிகமாக இருப்பதுடன் உடலுக்கு வலிமையும் ஆகும்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

• கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசி அதிகமாக இருப்பதுடன் உடலுக்கு வலிமையும் ஆகும்.

• சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சாப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயார் செய்யலாம்.

• ஒரு கப் பச்சரிசிக்கு அரை கப் உளுந்து சேர்த்து சுடுநீரில் ஊற வைக்கவும். பின்னர், அதை நைஸ் மாவாக அரைத்து இட்லி செய்து பாருங்கள். சாஃப்ட்டாகவும், ருசியாகவும் இருக்கும்.

• கடலைப்பருப்பு, தனியா தலா ஒரு தேக்கரண்டி, நான்கு காய்ந்த மிளகாய் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இந்தப் பொடியை சேவை, இடியாப்பம் செய்யும்போது அதன் மீது தூவி பின்னர் உப்பு, தாளித்த கறிவேப்பிலை கலந்து பரிமாறலாம். சுவையாக இருக்கும்.

• கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

• எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரண்டி மோர்விட்டுக் கலக்கிய பிறகு தேய்த்தால் பிசுக்கு நொடியில் போய்விடும்.

• பாலை புரை ஊற்றி வைக்கும் போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியைக் கலந்து ஊற்றி வைத்தால் தயிர் கட்டியாக வரும்.

• வடை மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் ஒரு மேஜைக் கரண்டி நெய் சேர்த்துவிடுங்கள். மாவு இறுகிவிடும்.

• ரவை உப்புமா அதிகமாக மீந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைச் சேர்த்து பிசைந்து வடை போன்று பொரித்தெடுத்துவிடுங்கள். சுவையாக இருக்கும்.

• எந்தவிதப் பாயசமாக இருந்தாலும் அதில் ஒரு மேஜைக்கரண்டி வெந்த பயத்தம் பருப்பைச் சேர்த்துவிட்டால் பாயசத்தின் சுவை பிரமாதமாக இருக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன், ஆர்.ஜெயலட்சுமி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.