

அக்காலப் பெண்கள் தங்கள் நகைகளை அரிசிப் பானைக்குள்தான் போட்டு வைப்பார்கள். பாலகங்காதர திலகர் மனைவியும் தன் நகைகளை அரிசிப்பானையில்தான் போட்டுவைத்தார். ஏனெனில் அரிசிப் பானையை திருடன் திருடமாட்டானாம்.
ஒருசமயம் பால கங்காதர திலகர் வீட்டு மூன் ஒரு பிச்சை எடுக்கும் பெண் பிச்சை கேட்டு வந்தாள். திலகர் மனைவி அரிசிப் பானையிலிருந்து ஓரளவு அரிசியை அந்தப் பிச்சைக்காரிக்கு போட்டார். அவர் போட்ட அரிசியுடன் திலகர் மனைவியுடைய வைர மூக்குத்தியும் போய்விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த திலகர், ""இது தெய்வ செயல் பிச்சைப் பாத்திரத்திலிருந்து வைர மூக்குத்தியை எடுக்க வேண்டாம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.