மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கடற்படை ஹெலிகாப்டர்களை இயக்கவுள்ள மகளிர்!

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தன. 

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 12:30 am

ஸ்ரீ

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவந்தடைந்தன.

நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கையாளும் திறன் பெற்ற இந்த தாக்குதல் ரக விமானங்களை இயக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற வேண்டும். இதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தியா வந்துள்ள ரஃபேல் போர் விமானங்கள் பயிற்சி மற்றும் கண்காணிப்பு பணிகளை ஏற்கெனவே தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்களை இயக்குவதற்கு பெண் விமானிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையில் பணியாற்றி வரும் துணை லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் துணை லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய 2 பெண் அதிகாரிகள் முதல் முறையாக போர்க்கப்பல்களில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தப் பெண் அதிகாரிகள் தங்கள் கன்ட்ரோலில் இருக்கும் சென்ஸார் உதவியைப் பயன்படுத்தி, எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை பற்றி ஹெலிகாப்டரில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.

கடற்படையின் "அப்சர்வர்' பயிற்சியை முடித்த இவர்கள் உள்பட 17 பேருக்கு சமீபத்தில் கொச்சியில் ஐ.என்.எஸ். கருடா போர்க்கப்பலில் வைத்து பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கடற்படை ஊழியர் தலைமை அதிகாரி (பயிற்சி) ஆன்டனி ஜார்ஜ், "கடற்படை கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்க பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் முன்னணி போர்க்கப்பல்களில் பெண்களும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக' கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.