ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தினை உப்புமா 

தினையை நெய் விட்டு இளம் சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். சூடான எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.

News image
Updated On :15 மார்ச் 2021, 5:45 am

தேவையானவை:

தினை அரிசி - 1 கிண்ணம்
கடுகு - 1 மே.கரண்டி
உளுத்தப்பருப்பு - 2 மே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 மே.கரண்டி
இஞ்சி. நறுக்கியது - சிறிது
மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு
நெய் - 2 மே.கரண்டி
கடலை எண்ணெய் - 3 மே.கரண்டி

செய்முறை:

தினையை நெய் விட்டு இளம் சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். சூடான எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.

இதனுடன் 3  கிண்ணம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வரும் போது வறுத்த தினையை சேர்த்து கட்டி தட்டாமல் உப்பு. பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும். மூடிவைத்து வேகவிடவும்.மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.