டபுள் பீன்ஸ் சுண்டல்
டபுள் பீன்ûஸ 6 மணி நேரம் ஊற விட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். வெறும் வாணலியில் வரமிளகாய், தனியா, கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை வறுத்து நீர் விட்டு தேங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து


தேவையானவை:
டபுள் பீன்ஸ் - அரைகிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
அரைப்பதற்கு:
வரமிளகாய் - 3
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - கால்தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
டபுள் பீன்ûஸ 6 மணி நேரம் ஊற விட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். வெறும் வாணலியில் வரமிளகாய், தனியா, கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை வறுத்து நீர் விட்டு தேங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வெந்த டபுள் பீன்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். டபுள் பீன்ஸ் சுண்டல் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...