புதிய வகை ஆடைகள்..!

இன்றைய இளம்பெண்கள் புடவைகள் மீது புதியதாய் மோகம் கொண்டுள்ளனர்.
புதிய வகை ஆடைகள்..!
Updated on
1 min read


இன்றைய இளம்பெண்கள் புடவைகள் மீது புதியதாய் மோகம் கொண்டுள்ளனர். இதையறிந்தவுடன் டிசைனர்கள் பெண்களின் விருப்பத்துக்கேற்ப பலவித டிசைன் சேலைகளையும், வேலைப்பாடுகள் மிகுந்த பிளவுஸ்களையும் களம் இறக்கியுள்ளனர்.

பட்டுச் சேலை மட்டுமல்லாது, விலை அதிகமான டிசைன் சேலைகள், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் தைத்துப் போடக் கூடிய ஆரி ஓர்க் நிறைந்த பிளவுஸ்கள் கண்ணைக் கவரும் வகையில் புதியதாய் அறிமுகம் ஆகியுள்ளன.

இப்போது ஆரிவேலைப்பாடுகள் மிகவும் பிரபலம் அடைந்துவருகிறது.  தங்களது புடவைகளின் மேட்சிங் பிளவுஸ்களில் ஆரி ஓர்க் செய்வதை அதிகமான பெண்கள் விரும்புகின்றனர். ரூ.ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் பிளவுஸ்களுக்கு கூட ஆரிஓர்க் செய்யப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது புடவை பிளவுஸில் திருப்பதி ஏழுமலையான் உருவத்தைப் பொறித்துள்ளார். இவர் அணிந்துள்ள புடவையை ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்.  ஆனால், ஏழுமலையான் உருவம் பொறித்த பிளவுஸ் தயாரிப்பதற்கு மட்டும் ரூ.35 ஆயிரம் செலவழித்துள்ளார்.  இந்தக் கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஏழுமலையான் உருவம் பொறித்த பிளவுஸ் அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com