தேவையான பொருள்கள்:
மணத்தக்காளி- 1 கிலோ
தயிர்- 125 கிராம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
மணத்தக்காளிக் காயைக் கழுவி சுத்தமாக்கி, அரை ஆழாக்கு தயிர் ஊற்றி மோரும் கூட விட்டு உப்பையும் போட்டு ஈயப் பாத்திரத்தில் மூன்று நாள்கள் வரை ஊறப் போடவும். பின்னர் எடுத்து வெயிலில் காய வைத்து ஜாடியில் வைத்துகொள்ளவும். மணத்தக்காளியை நெய்யில் வறுத்து பத்தியச் சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளவும்.