2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சுண்டைக்காய் வற்றல்

சுண்டைக்காயை கழுவி குழவிக் கல்லினால் காய்களை நசுக்கி,  தண்ணீரில் போட்டு விதைகள் போக அலசி அலம்பி தேவையான உப்பு சேர்த்து ஜாடியில் ஊறப் போடவும்.

News image
Updated On :16 ஜூலை 2023, 12:19 pm

ஜி.மஞ்சரி

தேவையானவை;

சுண்டைக்காய்- அரை கிலோ
தயிர்-125 கிராம்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

சுண்டைக்காயை கழுவி குழவிக் கல்லினால் காய்களை நசுக்கி,  தண்ணீரில் போட்டு விதைகள் போக அலசி அலம்பி தேவையான உப்பு சேர்த்து ஜாடியில் ஊறப் போடவும். ஒரு வாரத்துக்குப் பின்னர் எடுத்துத் தயிரில் தேவையான உப்பு சேர்த்து காயைப் பிழிந்து கலந்து ஒரு கற்சட்டியில் ஒரு நாள் அழுக்கி வைத்திருக்க வேண்டும். அடுத்த நாள் வெயிலில் காய வைத்து நன்றாகக் காய்த்ததும் சேமித்துகொள்ள வேண்டும்.  உப்பில் ஊறும்போது எடுத்து எண்ணெயில் வதக்கி ஊறுகாயாகச் செய்யலாம். வற்றலான  பின்னர் குழம்பிலும் போடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.