திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

பானகம்

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும்.

News image

பானகம்

Updated On :28 ஜூலை 2024, 12:06 pm

தேவையான பொருள்கள்:

புளி - 150 கிராம் (அ) எலுமிச்சைப்

பழம் - 3

வெல்லம் - 250 கிராம்

சுக்குப்பொடி -  கால் தேக்கரண்டி

ஏலக்காய்த்தூள்  - ஒரு சிட்டிகை

பச்சைக் கற்பூரம் (விரும்பினால்) - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும். அல்லது எலுமிச்சைச் சாறெடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடிக்கவும். அதனுடன் வடிகட்டிய புளித் தண்ணீருடன்/எலுமிச்சைச்சாற்றுடன்  சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு அதில் சுக்குப்பொடி,  உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கோயிலுக்குக் கொடுப்பது என்றால் பச்சைக் கற்பூரம் கலந்தால் சிறப்பு.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.