மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நன்னாரி சர்பத்

News image
Updated On :8 ஜூன் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

நன்னாரி வேர்- 2 கிண்ணம்

சர்க்கரை- 1 கிண்ணம்

எலுமிச்சம் பழம்- 2

சிவப்பு ஃபுட் கலர்- 2 சிட்டிகை

செய்முறை:

நன்னாரி வேரை தண்ணீரில் கழுவி எடுத்து பாத்திரத்தில் போட்டு இரு டம்ளர் தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு கரண்டி தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட்கலர் சேர்த்து கலக்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி இத்துடன் சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். தேவையானபோது இந்த ஜூஸை கால் டம்ளர் எடுத்து, முக்கால் டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது கூடுதல் சுவையைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.