8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அரைக்கீரை அல்வா

அரைக்கீரை அல்வா: ஆரோக்கியமான இனிப்பு

Published On :23 ஜூன் 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

அரைக்கீரை - மூன்று கைப்பிடி அளவு (நன்கு ஆய்ந்தது)

கோதுமை மாவு - கால் கிலோ

வெல்லம் - அரை கிலோ

நெய் - 50 கிராம்

முந்திரிப் பருப்பு - 10

ஏலக்காய்த் தூள் - கொஞ்சம்

செய்முறை:

கீரையைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் இட்டு நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து இட்டு, போதிய அளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு பாதி பதம் வந்ததும், கோதுமை மாவு, நன்கு அரைத்த கீரை விழுது சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். இடைஇடையே நெய் ஊற்றி கைவிடாமல் கிளறி கொடுக்கவும். கலவை நன்கு வெந்ததும், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். தட்டில் பரவலாக வைத்து நன்கு ஆறினதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும். அரைக்கீரை அல்வா தயார்.

-ஆர்.ராதிகா, விக்கிரமசிங்கபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.