மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துகொண்டால் குழம்பு சுவையாக இருக்கும்.
அடைமாவுடன் சிறிது சேமியாவை ஊற வைத்து, பின்னர் வார்த்தால் சுவையாக இருக்கும்.
மிளகாய் பொடியுடன் தயிரைக் குழைத்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட சுவையே தனி.
சோர்வை போக்கும் தவசி கீரையை சாம்பாரில் சேர்க்க சுவை கூடும். இரும்புச் சத்து, வைட்டமின்கள் அதிகமுள்ள இந்தக் கீரையை சாப்பிட்டால், உடல் புத்துணர்வு பெறுவதோடு, ரத்தச் சோகையைப் போக்கும்; ஆண்மைக் குறைவை அதிகரிக்கும்.