பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புடலங்காய் அடை

புடலங்காய் அடை செய்வதற்கு முதலில் புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

News image

புடலங்காய் அடை

Updated On :10 நவம்பர் 2024, 2:05 pm IST

தேவையான பொருள்கள் :

புடலங்காய் - 1

புழுங்கலரிசி, பச்சரிசி - தலா 2 கிண்ணம்

கடலைப் பருப்பு , துவரம் பருப்பு - தலா 1 கிண்ணம்

உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு - கால் கிண்ணம்

கொள்ளு - 4 மேசைக்கரண்டி

புதினா - கால் கிண்ணம்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 20

காய்ந்த மிளகாய் - 10

சீரகம் - 1 மேசைக்கரண்டி

தனியா - 4 மேசைக்கரண்டி

பெருங்காயம் - 2 சிட்டிகை

பூண்டு - 10 பல்

கடுகு - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

புடலங்காய் அடை செய்வதற்கு முதலில் புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். புடலங்காயைப் பொடியாக நறுக்கவும்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை, சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள புடலங்காய் கலவையை சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை தடவி, கலக்கி வைத்துள்ள மாவு கலவையில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும். ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, தோசையை சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான புடலங்காய் அடை தயார். இந்த அடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.