புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அம்மிணி கொழுக்கட்டை

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கால் கிண்ணம் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சி, இடித்த பச்சை மிளகாய், உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

Published On :

தேவையான பொருள்கள்

இடியாப்ப மாவு - 1 கிண்ணம்

இஞ்சி - 1 இஞ்ச்

பச்சை மிளகாய் - 2

உப்பு - அரை தேக்கரண்டி

கடுகு , எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

இட்லிப் பொடி - 3 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கால் கிண்ணம் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சி, இடித்த பச்சை மிளகாய், உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் தீயைக் குறைத்து 1 கிண்ணம் இடியாப்பம் மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டே கட்டி இல்லாமல் கிளறுங்கள்.

மாவு ஒன்றாகச் சேர்ந்ததும் மூடி 5 நிமிடம் ஆறவிடுங்கள். கையால் பிடிக்கக்கூடிய சூட்டுக்கு வந்ததும் நன்றாகப் பிசைந்து, சிறுஉருண்டைகளாக உருட்டுங்கள். இந்த உருண்டைகளை இட்லிப் பாத்திரத்தில் வைத்து 10 -12 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வதக்குங்கள். அதன் பிறகு இட்லிப் பொடியை சேர்த்து ஒரு சில விநாடிகள் மட்டும் கிளறி, ஆவியில் வேக வைத்த அம்மிணி கொழுக்கட்டையைச் சேர்த்து மெதுவாகப் பிரட்டி, இட்லிப் பொடி எல்லா உருண்டைகளிலும் நன்றாக ஒட்டும் வரை 2- 3 நிமிடங்கள் வதக்கி இறக்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.