தேவையான பொருள்கள்:-
பேரிச்சம் பழம்- 1 கிண்ணம்
பால்கோவா - 1 கிண்ணம்
பால் பவுடர் - 1/2 கிண்ணம்
பால், உப்பு- சிறிதளவு
முந்திரி- 10
ஏலக்காய் -சிறிதளவு
நெய் - தேவையான அளவு
சர்க்கரை பவுடர் - 2 கிண்ணம்
செய்முறை:
பேரிச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முதலில் வாணலியில் சிறிது நெய் ஊற்றி கோவாவை வதக்கவும். பின்பு அதனுடன் நறுக்கிய பேரிச்சம் பழத்தை சேர்த்து கிளறவும். பின்பு அதனுடன் பால்பவுடரை சிறிது பாலில் கலக்கி அதில் விட்டு கிளறவும்.
இக்கலவையுடன் முந்திரி, ஏலக்காய், சர்க்கரை பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுண்டி வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். நன்கு சுண்டி வந்தவுடன் வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது நேரம் ஆறியவுடன் வில்லைகளாக போடவும். ஒவ்வொரு வில்லையின் நடுவில் முந்திரியை வைத்து அலகரிக்கவும்.
நன்கு ஆறியவுடன் வில்லைகளை எடுத்து காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலப்பட நெய்யில் திருப்பதி லட்டு: திண்டுக்கல் பால் பொருள் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை
கோதுமை மாவு அப்பம்
ஹோம்மேட் சாக்லேட் ஐஸ் கிரீம்
ஜிகர்தண்டா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



