வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கார் சாம்பியன் டயானா பூண்டோல்..!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்திய தேசிய கார் பந்தயத்தில் எம்.ஆர்.எஃப். சலூன்ஸ் பிரிவில், 2024-ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார் டயானா பூண்டோல்.

News image

டயானா பூண்டோல்

Updated On :8 செப்டம்பர் 2024, 11:20 am

சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்திய தேசிய கார் பந்தயத்தில் எம்.ஆர்.எஃப். சலூன்ஸ் பிரிவில், 2024-ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார் டயானா பூண்டோல்.

புணேவை சேர்ந்த இருபத்து எட்டு வயதான இவர், இந்தக் கோப்பையை வென்றிருக்கும் முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அவரிடம் கூறியதாவது:

''கார் பந்தயங்களில் அர்ப்பணிப்போடு பங்கேற்பேன். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் ஆர்வம் குறையவில்லை.

கார் பந்தயம் பெண்களுக்கு மட்டும் நடந்த பந்தயம் அல்ல; ஆண் வீரர்களும் கலந்து கொண்டனர். பாலின சமநிலையுடன் நடைபெற்ற பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சிதான்.

இறுதிப் பந்தயங்களில் கவனம் செலுத்த விரும்பியதால் நான் எனது கைப்பேசியைக் கூட தொடவில்லை. அந்த அளவுக்கு ஆர்வத்திலும் விடாமுயற்சியிலும் இருந்தேன். இதற்கு முன்பு துபை ஆட்டோட்ரோம், ஹாக்கன்ஹெய்ம்ரிங், பெல்ஜியத்தில் உள்ள எஃப் 1 சர்க்யூட் டி ஸ்பா மற்றும் ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல ஃபார்முலா 1 சுற்று போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அந்த போட்டி அனுபவங்கள் எனது திறமைகளை மெருகேற்றியதுடன் தேசிய சாம்பியன் போட்டிகளில் சவால்களை எதிர்கொள்ள என்னைத் தயார் செய்தது. ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள கார் பந்தயப் போட்டியிலும் சாம்பியனாக முடிந்தது.

கடந்த ஆண்டும் சென்னையில் நடந்த தேசிய கார் பந்தயங்களில் கலந்து கொண்டு முத்திரை பதித்தேன்.

நாடு முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கார் பந்தயங்களில் பங்கேற்றுவருகின்றனர். அவர்களும் சாதிக்க வேண்டும்'' என்கிறார் டயானா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.