தேவையானவை:
தனியா (கொத்தமல்லி விதை) - கால் கிண்ணம்
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயப்பொடி , மஞ்சள்தூள், மிளகு - ஒரு தேக்கரண்டி
கொப்பரைத் துருவல் (விரும்பினால்) - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் தனியா, கடலைப் பருப்பு, பச்சரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துருவல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்து, மஞ்சள்தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இந்தப் பொடியை தேவையானபோது கடைந்த மோருடன் கலந்து, தாளித்து, நுரைத்து வரும்போது இறக்கினால் மோர்க்குழம்பு நொடியில் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.