பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாழைப்பழ போளி

வாழைப்பழ போளி செய்வது எப்படி?

Published On :

தேவையான பொருள்கள்:

பழுத்த பெரிய அளவிலான வாழைப்

பழம் - 1

மைதாமாவு 1 கிண்ணம்

உப்பு, ஏலக்காய்த்தூள் - தலா 1/4 தேக்கரண்டி

சூஜிரவா, தேங்காய்த்துருவல் - தலா 1/4 கிண்ணம்

பொடித்த வெல்லம் - 3/4 கிண்ணம்

பாதாம், முந்திரி - தலா 10

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதாவுடன் உப்பு, சிறிதளவு எண்ணெய், தேவையான தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்து, 2 மணி நேரம் ஊறவைக்கவும். வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் கூழாக்கி, தனியே வைக்கவும். பாதாம், முந்திரியை கொரகொரப்பாக அரைத்துவைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கிளறி, தேங்காய், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். பொடித்த பாதாம், முந்திரியைச் சேர்த்துக் கிளறி, கடாயின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைக்கவும்.

பிசைந்துவைத்துள்ள மாவை, சப்பாத்திகளாக இட்டு, நடுவில் வாழைப்பழக் கலவையை சிறிதளவு வைத்து, மூடவும். கையில் லேசாக எண்ணெய்த் தடவிக்கொண்டு, 'ரொட்டி' போல் தட்டவும். இதை, சூடான தோசைக்கல்லில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு, இரு பக்கமும் திருப்பிவிட்டு, வேகவைத்து, எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.