தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - கால்கிலோ,
பால் பவுடர் - 3 மேஜை கரண்டி,
பொடித்த சர்க்கரை -3 மேஜை கரண்டி,
சர்க்கரை - அரை கிண்ணம்,
ஏலத்தூள், ரோஸ் எசன்ஸ், எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசித்து, பொடித்த சர்க்கரை, பால் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும். பிறகு 10 நிமிடங்கள் வைத்திருந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து ரோஸ் எசன்ஸ், ஏலத்தூள் கலந்து உருண்டையை அதில் போட்டுவிடவும். அரை மணி நேரம் ஊறியதும் உருளைக்கிழங்கு குலோப்ஜாமூன் தயார்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
