தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு- 1 கிலோ
கடுகு, உளுந்தம்பருப்பு - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல்- 10 தேக்கரண்டி
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி வேக வைத்துக் கொள்ளவும். நன்றாக வெந்ததும் தோலை உரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, அத்துடன் நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொண்டு மேலும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலையையும் போட்டு கிளறி இறக்கவும். ருசியான மரவள்ளிக் கிழங்கு பொரியல் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








