ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேருங்கள். ஆப்பம் ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
-ஆப்பச்சட்டியில் எப்பொழுதும் எண்ணெய் தடவி வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் எந்த நேரத்தில் ஆப்பம் செய்யும் போதும் எளிதாகச் செய்யலாம்.
-ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது ஒரு மேஜை கரண்டி கோதுமையை ஊறவைத்து அரைத்தால், மிருதுவான ஆப்பம் தயார்.
-பச்சரிசியை வெந்நீரில் ஊற வைத்து ஆப்பத்துக்கு அரைத்தால், செய்யும் ஆப்பம் மொறுமொறுப்பாக இருக்கும்.
-பழைய சாதம் மிகுந்துவிட்டால் அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து ஆப்பம் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
-மிருதுவான ஆப்பம் செய்ய, மாவு ஆட்டும்போது தேங்காய்த் துருவல், வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து, ஆப்பம் வார்த்தால் சூப்பர் சுவையில் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






