மழை

 துளித்துளியாய்த் துளித்துளியாய்த் தூறல் போடுதே - மனம்
மழை

 துளித்துளியாய்த் துளித்துளியாய்த்
 தூறல் போடுதே - மனம்
 சின்னஞ்சிறு குழந்தை போலக்
 குதித்து ஆடுதே!
 
 பறவையெல்லாம் கூடுதேடிப்
 பறந்து ஓடுதே - ஒரு
 பறவை, கூட்டில் சிறகுலர்த்திப்
 பாட்டுப் பாடுதே!
 
 ஆனைபோல மேகமெல்லாம்
 அசைந்து போகுதே - அவை
 வானத்திலே மோத, மின்னல்
 வெளிச்சம் ஆகுதே!
 
 இலைநுனியில் விழுந்ததுளி
 ஏதோ தேடுதே - அது
 இலை நுனியை ஊஞ்சலாக்கி
 இசைந்து ஆடுதே!
 
 மண்மணக்கப் பெய்தமழை
 மனத்தைக் கழுவுதே - சுகம்
 கொண்டுவந்து கொட்டி நம்மைக்
 கட்டித் தழுவுதே!
 
 மண்ணுலகம் வாழ்வதற்கு
 மழையும் உதவுதே - மழை
 கொண்டுவந்து சேர்ப்ப தற்குக்
 காடும் உதவுதே!
 
 நாட்டுவளம் காப்பதற்கு
 நாமும் உதவுவோம் - நம்
 காட்டு வளம் குறையாமல்
 காத்து மகிழுவோம்!

 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com