ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெங்காயம்

எந்தக் குழம்பாய் இருந்தாலும் இதுவும் அதிலே கலந்திடுமாம்!

News image
Updated On :11 ஜூலை 2014, 9:39 am

புலேந்திரன்

செந்நிறம் பார்க்க அழகுடனே

சிரிப்பது போல தெரிந்திடுமாம்!

கண்ணீர் விடாத கண்களையும்

கண்ணீர் சொட்டிட வைத்திடுமாம்!

எந்தக் குழம்பாய் இருந்தாலும்

இதுவும் அதிலே கலந்திடுமாம்!

வெந்தயத்தோடு வதங்கியுமே

வெந்தே சுவையைத் தந்திடுமாம்!

கட்டித் தயிருடன் சோற்றுக்குக்

கடித்துத் தின்ன தனிச்சுவையாம்!

மட்டில் லாத நன்மைகளாம்

மருத்துவ குணமும் உள்ளதுவாம்!

உரித்தால் தோலும் வந்திடுமாம்

உரித்திட உரித்திடத் தோல் வருமாம்!

உரித்து முடித்துப் பார்த்தாலோ

ஒன்றுமில்லை, "வெங்காயம்'!

இருந்த தெல்லாம் உரிந்தபின்னே

ஏது மில்லா வெங்காயமாய்

இருப்போர் தம்மைப் போற்றிடுவோம்

எல்லாம் கொடுத்த கர்ணனென்றே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.