குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எங்கள் வேலை!

ஓர் ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் வெளியில் சென்று வர ஓரு பல்லக்கு இருந்தது. பல்லக்கு தூக்க சில ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தான்.

News image
Updated On :20 பிப்ரவரி 2016, 10:38 am

எஸ்.திருமலை

ஓர் ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் வெளியில் சென்று வர ஓரு பல்லக்கு இருந்தது. பல்லக்கு தூக்க சில ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தான்.

 அந்த செல்வந்தன் ஒரு விலையுயர்ந்த நாயையும் வளர்த்து வந்தான். அதுவும் அவனிடம் அன்படனும், நன்றியுடனும் பழகியது. சில சமயம் அது பல்லக்கில் செல்வந்தன் செல்லும்போது கூடவே செல்லும். அவனும் அதனிடம் அன்பு பாராட்டி வளர்த்து வந்தான்.

 ஒரு நாள் திடீரென்று அந்த நாய் காணாமல் போய் விட்டது! வீடு, தோட்டம் எங்கும் தேடினான். அந்த நாய் கிடைக்கவே இல்லை.

 செல்வந்தன் பல்லக்குத் தூக்கும் ஆட்களைக் கூப்பிட்டு,""நேற்று நான் வெளியில் செல்லும்போது ஒருவேளை நாய் கூடவே வந்திருக்கும்...,அதை ஊரெங்கும் சுற்றித்  தேடிப்பாருங்கள்.'' என்றான்.

 ஆனால் பல்லக்குத் தூக்கும் ஆட்களோ, ""பல்லக்குத் தூக்குவது மட்டும்தான் எங்களது வேலை. நாயைத் தேடுவது அல்ல. அதற்கு வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்றனர்.

 செல்வந்தன் உடனே பல்லக்கில் ஏறி அமர்ந்து, ""சரி நீங்கள் பல்லக்கே தூக்குங்கள். நான் நாயைத் தேடுகிறேன்'' என்றான்.

செல்வந்தனைச் சுமந்துகொண்டு ஊரெங்கும் அலைந்தனர் அந்த ஆட்கள். நாய் கிடைத்த பாடில்லை! அப்போது அவர்கள், ""சுமப்பதைவிட சுற்றுவதே மேல்'' என்று உணர்ந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.