

மரங்கள் எத்தனை வகையாகும்! - அவை
மாபெரும் உலகுக்கு வரமாகும்!
இறைவனின் படைப்பில் உன்னதமாம்! - அது
இயற்கை வளம் தரும் அற்புதமாம்!
உலகத்தில் மரங்கள் பலகோடி! - அவை
உயிர்களின் வளர்ச்சிக்கு உயிர்நாடி!
அழகாய் பெரிதாய் வளர்ந்திடுமே!
அது பறவைகள் வாழ்ந்திட இடம் தருமே!
மரங்களின் அழகே கிளைகள்தான்! -அவை
மனதினை மயக்கிடும் சிலைகள்தான்!
கரங்கள் போன்றே விரிந்திருக்கும்! - அதில்
இலையுடன் மலர்கள் பூத்திருக்கும்!
காய், கனி தருவதும் மரங்கள்தான்! - இதைக்
காத்திட நாம் மறக்கலாமோ!
தாய்போல் நேசிக்க வேண்டுமடா! - மரம்
சுவாசக் காற்றைத் தூண்டுமடா!
தாவரம் உலகுக்கு ஆதாரம்! - இதை
தருகின்ற மரங்களோ தாயாகும்!
யாவரும் பசுமையைக் காப்போமே! - நாம்
இறைவனின் வரத்தைப் பெறுவோமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

