மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடை வண்டி தந்த கொடையாளி!

பல்லவ மன்னன் லிங்கையன் மகனுக்குபண்புடை சோழன் நடைவண்டி அளித்தான்!நல்லபொன் நவரத்தி னங்களால் ஆன தேர்! 

News image
Updated On :30 மார்ச் 2018, 6:30 pm

கொ.மா.கோதண்டம்

பல்லவ மன்னன் லிங்கையன் மகனுக்கு
பண்புடை சோழன் நடைவண்டி அளித்தான்!
நல்லபொன் நவரத்தி னங்களால் ஆன தேர்! 
நாளும் அதனால் சிறுவன் விளையாடினான்!

தேர்நடை வண்டியை கண்டவர் வியந்தனர்!
சிறுவனும் அரண்மனை முன் விளை யாடினான்!
பேர்புகழ் பெற்ற பல்லவ ராயனும் 
புலவர், வறியோர்க்கு வாரியே வழங்கினான்!

ஒரு பெரும் புலவர் வயதான நிலையிலே
உரிய தன் மகளுக்கே திருமணம் செய்திட
திருவளர் அரண்மனை தேடியே வந்தார்!
சீர் திகழ் மன்னவன் அயலூரி லிருந்தான்!

மன்னனைக் காணாது புலவரும் வருத்தமாய் 
வந்தவழி திரும்பிய தைக்கண்ட சிறுவனும்
""ஐயா, புலவரே!... ஏன் திரும்பிப் போகிறீர்?
என்னிடம் சொல்வீர்'' என்றா னரசன் மகன்!

""வறுமையால் வாடும் நற்றமிழ்ப் புலவன் நான்
மகளுக்குத் திருமணம்,,,,பொருள் வேண்டி வந்தேன்!
வெறுமையில் திரும்பினேன்...வேறென்ன செய்வது!
மறுபடி வந்திட என் உடல் நிலை சரியில்லை...''

""ஐயா, ,பொன்னா லான சிறுதேர் இது!....
தருவேன் இதனை எடுத்துச் செல்வீர்....
விற்றிதைத் திருமணச் செலவைச் செய்வீர்!....''
என்றான் சிறுவன்!.... தயங்கினார் புலவர்!

தாயார் அரசியும் இதனைப் பார்த்தார்! 
தனயன் குணத்தை வியந்தார்! புலவரை
அழைத்தார் கொடுத்தார் வண்டியை! அதனைப் 
பெற்றார் நன்றிப் பெருக்குடன் புலவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.