இறைமாட்சி
பொருட்பால் - அதிகாரம் 39 - பாடல் 8
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
நீதி நெறி போற்றியே
நாட்டை ஆளும் மன்னனை
இறைவனென்று போற்றுவார்
எல்லா மக்களும் வணங்குவார்
குறையில்லாமல் முறையுடன்
நாட்டை ஆளத் தெரிந்தவன்
மக்கள் நெஞ்சில் என்றுமே
தலைவனாக வாழுவான்.