/

தினமணியும் நானும் 1934-2019: தினமணி தலை​யங்​கம் வர​லாற்​றுப் பதி​வுப் பெட்ட​கம்!

சிறு வய​தி​லி​ருந்தே எனக்​குப் பத்​தி​ரிகை படிப்​ப​தில் ஆர்​வம் உண்டு. அப்​பொ​ழுது வாரப்​பத்​தி​ரி​கை​க​ளான ஆனந்த விக​டன், கல்கி, குமு​தம், கல்​கண்டு, மாத பத்​தி​ரி​கை​ளான கலை​ம​கள், மஞ்​சரி, சிறு​வர்

News image
Updated On :12 ஜனவரி 2020, 11:07 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

சிறு வய​தி​லி​ருந்தே எனக்​குப் பத்​தி​ரிகை படிப்​ப​தில் ஆர்​வம் உண்டு. அப்​பொ​ழுது வாரப்​பத்​தி​ரி​கை​க​ளான ஆனந்த விக​டன், கல்கி, குமு​தம், கல்​கண்டு, மாத பத்​தி​ரி​கை​ளான கலை​ம​கள், மஞ்​சரி, சிறு​வர் பத்​தி​ரி​கை​க​ளான அம்​புலி மாமா, கண்​ணன் மற்​றும் மாயாவி (கலர் வண்​ணப்​ப​டக் கதைப் புத்​த​கம்) என ஒன்று விடா​மல் படிப்​பேன். பள்​ளி​யில் எனது மறக்க முடி​யாத தலை​மை​யா​சி​ரி​யர் அ.சுப்​பி​ர​ம​ணிய ஐயர் ஏற்​ப​டுத்​திய மாண​வர் படிப்​ப​கத்​தில் தின​ம​ணி​யும் ஏனைய தமிழ் தின​ச​ரி​க​ளை​யும் படிப்​பேன். இள​மை​யில் படித்த அந்த விஷ​யங்​கள் தான் இன்​றைய எனது கட்டு​ரை​க​ளின் விவர நீருற்று என்​றால் மிகை​யா​காது.

தின​ம​ணிக்​கும் எனக்​கும் "பக்​கத்து வீட்டு உறவு' தின​ம​ணி​யின் முதல் ஆசி​ரி​யர் சொக்​க​லிங்​கம் எனக்​குப் பல ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் தென்​கா​சி​யில் பிறந்​த​வர். அதன் பின் வந்த "கணக்​கன்' ஏ.என்.சி​வ​ரா​மன் நான் பிறந்த தென்​காசி தெற்கு மாசி வீதி​யில் 46-ஆம் எண் வீட்டிற்கு அடுத்த மேற்​கி​லுள்ள 45-ஆம் எண் வீட்டில் சென்​னைக்கு வரு​வ​தற்கு முன்பு வசித்து வந்​தார். என் தந்​தை​யின் நெருங்​கிய நண்​பர்.

தின​மணி வாச​க​ரான நான் தின​ம​ணி​யில் எழு​து​ப​வ​னாக மாறி​யது ஒரு சுவா​ர​சி​ய​மான சம்​ப​வம். 1930-ஆம் ஆண்டு காந்​தி​ய​டி​கள் தலை​மை​யில் "தண்டி யாத்​திரை'” என்ற பெய​ரில் உப்பு சத்​தி​யா​கி​ர​கம் நடை​பெற்​றது.  சென்னை மாகா​ணத்​தில்” 1930 ஏப்​ரல் 13 முதல் ஏப்​ரல் 28 வரை மூத​றி​ஞர் ராஜாஜி தலை​மை​யில் திருச்​சி-​வே​தா​ரண்​யம் உப்பு சத்​தி​யா​கி​ர​கம்” நடை​பெற்​றது. இத​னு​டைய 40-ஆம் ஆண்டு நிறைவு நினைவு விழா​வாக மாண​வர்​களை வைத்து திருச்​சி​யில் இருந்து வேதா​ரண்​யம் வரை 150 மைல் தூரத்​திற்கு ஒரு மாண​வர் பாத யாத்​தி​ரையை வி.ஆர்.​ராதாகிருஷ்​ணன், டாக்​டர்.​எஸ். விஜ​ய​லெட்​சு​மி​ இருவரும் நடத்​தி​னார்​கள். இதில் கலந்து கொண்ட மாண​வர்​க​ளில் நானும் ஒரு​வன். முடி​வில் மாண​வர்​க​ளின் அனு​ப​வத்​தைக் கட்டு​ரை​யாக எழுதி தரச் சொல்லி தேர்​வா​வது தின​ம​ணி​யில் வெளி​யா​கு​மென்று சொன்​னார்​கள்.

1970-இல் ஜூலை மாதம் என நினைக்​கி​றேன்.  சென்னை விவே​கா​னந்தா கல்​லூ​ரி​யில் நுழைந்த என்​னி​டம் சக மாண​வர்​கள் "உனக்கு நிறை​யக் கடி​தங்​கள் வந்​தி​ருக்கு'” என்று சொன்​னார்​கள் எனக்​குப் பெற்​றோ​ரி​டம் இருந்து வரும் கடி​தங்​க​ளும் பேனா நண்​பர்​க​ளின் பிற கடி​தங்​க​ளும் நான் தங்​கி​யி​ருந்த சகோ​த​ரன் வீட்டிற்​குத் தான் வரும் கல்​லூ​ரிக்​குப் பல கடி​தங்​கள் எப்​படி வரு​மென்று யோச​னை​யு​டன் கல்​லூரி தபால் பெட்டியை திறந்த போது சுமார் 50 கடி​தங்​க​ளுக்கு மேல்  எனக்​கா​கக் காத்​தி​ருந்​தன. 

முதல் கடி​தத்​தைப் படித்​த​வு​ட​னேயே தெரிந்து விட்டது எனது பாதயாத்​திரை அனு​ப​வம் ஞாயிறு வெளி​யா​கும் தின​மணி சுடரில் முழுப் பக்க கட்டு​ரை​யாக வந்​தி​ருக்​கி​றது என்று. தின​ம​ணி​யில் பாதிப் பக்க அள​வில் பின் அடிக்​கா​மல் சுடர் அனுபந்தம் வெளி வந்​தது. கடி​தங்​க​ளைப் படிக்​கப் படிக்க என் மன​தில் உற்​சா​க​மும் மகிழ்ச்​சி​யும் பிறீட்​டன. பாதயாத்​திரை கட்டு​ரை​யைப் பாராட்டி வந்த கடி​தங்​கள் அவை. கல்​லூரி மாண​வ​னான நான் எழுதி தின​ம​ணி​யில் வந்த கட்டு​ரை​யால் நான் வானில் மிதக்க ஆரம்​பித்​தேன். 

இது முடிந்து ஒரு மாதத்​திற்​குப் பின்​னால் நான் வகுப்​பில் இருக்​கும் பொழுது கல்​லூ​ரி​யின் மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யன் என்னை அழைப்​ப​தா​கத் தக​வல் வந்​தது அவர் முன் ஆஜ​ரா​னேன். "வா கல்​லூரி முதல்​வரை சந்​திப்​போம்' என அடுத்த அறைக்கு அழைத்​துச் சென்​றார். என்​னைப் பார்த்​த​வு​டன் கல்​லூரி முதல்​வ​ரும் பேரா​சி​ரி​ய​ரு​மான பு.வெங்​க​ட​ரா​மன் "இளை​ஞனே உனக்கு தின​ம​ணி​யில் இருந்து ஒரு கடி​தம் வந்து இருக்​கி​றது. உன் கட்டு​ரைக்கு அவர்​கள் அனுப்​பிய சன்​மா​ன​மாக அது இருக்​கு​மென்று நினைக்​கி​றேன்'” என்று ஆங்​கி​லத்​தில் சொல்லி ஒரு கவரை என்​னி​டம் நீட்டி​னார்.  கவரை பிரித்த எனக்கு இன்ப அதிர்ச்சி அதில் என் கட்டு​ரைக்​காக தின​மணி பத்​தி​ரிகை ரூ.20 சன்​மா​ன​மாக அனுப்​பி​யி​ருந்​தது.  

இத​னு​டைய பிர​தி​ப​ல​னா​கப் பின்​னா​ளில்,  நான் மதுரை காந்தி நினைவு அருங்​காட்​சி​ய​கத்​தில் உறுப்​பி​ன​ராகி காந்தி-150 விழாவை அதே தின​மணி பத்​தி​ரி​கை​யு​டன் இணைந்து, தமிழ்​நாடு கல்​லூரி மாண​வர்​க​ளுக்​காக ஒரு கட்டு​ரைப் போட்டி, 30 மாண​வி​கள், 10 மாண​வர்​க​ளை​யும் தேர்ந்​தெ​டுத்து 9 நாட்கள் தமிழ்​நாட்​டில் காந்​தி​ய​டி​கள் தடம் பதித்த இடங்​க​ளுக்கு "அண்​ண​லின் அடிச்​சு​வட்​டில்' பேருந்​துப் பய​ணம் நடத்​தி​யதை என் வாழ்​நா​ளில் மறக்க முடி​யா​தது. 

என் வாழ்க்​கை​யில் கல்​லூரி மாண​வ​னாக நான் இருந்த போது சம்​பா​தித்த முதல் வரு​மா​னம் தின​மணி எனக்கு வழங்​கி​யது என்​பதை மிக மகிழ்ச்​சி​யு​ட​னும் பெரு​மை​யு​ட​னும் பதிவு செய்​கி​றேன். மீனாட்​சி​பு​ரம் மத​மாற்​றம் நெல்லை அரு​கே​யுள்ள மாரந்​தை​யில் மும்பை அணு​க​திர் கழி​வு​க​ளைப் புதைக்க முயற்சி, தூத்​துக்​குடி டூரிங் டாக்​கீஸ் எரிந்து மக்​கள் மாண்​டது போன்ற பல செய்​தி​கள் உல​குக்கு முத​லில் சொன்ன தின​மணி நெல்லை நிரு​பர் மறைந்த நாரா​ய​ண​னும், நானும் உடுக்கை இழந்​த​வர் போல் உத​வும் நண்​பர்​கள்.  

நீதி​ய​ர​சர் ஹரி​ப​ரந்​தா​ம​னு​டன்,  அன்​றைய வழக்​க​றி​ஞ​ரும் இன்​றைய நீதி​ய​ர​ச​ரு​மான ஜி.ஆர்.​சு​வா​மி​நா​த​னும் சென்​னை​யில் ஒரு விழா​விற்கு வேட்டி கட்டி சென்ற பொழுது அனு​ம​திக்​கப்​ப​ட​வில்லை என்ற செய்​தியை பார்த்​த​வு​டன் "தடை போட முடி​யாது, கூடாது” என்ற தலைப்​பில் வேஷ்​டி​யின் புகழ்​பாடி எழு​திய கட்டுரை 18.07.2014-ஆம் தேதி​யன்று தின​ம​ணி​யில் வெளி​யா​னது.

இடைக்​கா​லத்​தில் ஆங்​கி​லக் கட்டுரை எழு​திக் கொண்​டி​ருந்த நான் மீண்​டும் தின​ம​ணி​யோ​டும் தமி​ழோ​டும் உற​வாட ஆரம்​பித்​தேன். வெளி​யூர் பய​ணம் சென்​றா​லும் வந்த பிறகு பழைய தின​மணி பத்​தி​ரி​கை​க​ளைக் குறிப்​பா​கக் கட்டு​ரை​யும் ஆசி​ரி​யர் தலை​யங்​கத்​தை​யும் படிக்​கத் தவ​றி​ய​தில்லை. 85-ஆவது அகவை காணும் தின​ம​ணி​யின் வாச​கர்​கள் சார்​பாக அதன் புகழ் வாய்ந்த ஆசி​ரி​யர்​கள் தின​மணி சொக்​க​லிங்​கம்,  சிவ​ரா​ம​னுக்கு புதிய தென்​காசி மாவட்ட தலை​ந​க​ரில்  சிலை நிறுவ வேண்​டும் என்​பது எனது அவா.

இதை 90-ஆண்​டு​கள் கடந்து விட்ட தென்​காசி திரு​வள்​ளு​வர் கல்கி மேடை​யில் இன்​றைய ஆசி​ரி​யர் வைத்​தி​ய​நா​தன் முன் கோரிக்கை வைத்​தேன். தின​மணி வாச​கர்​க​ளி​டம் பணம் வசூ​லித்து இந்​தச் சிலையை தின​மணி 100 ஆண்டு காணும் முன் நிறுவ வேண்​டு​மென்​பது என்​னு​டைய அவா. தின​ம​ணி​யின் தலை​யங்​கங்​கள் தனிச்​சி​றப்​பா​னவை. ஆங்​கி​லப் பத்​தி​ரி​கை​கள் தலை​யங்​கம் எழு​தும் பொழுது அன்று முதல் இன்று வரை கிட்டத்​தட்ட எல்​லாப் பத்​தி​ரி​கை​க​ளும் தலை​யங்​கம் எழுத ஆரம்​பித்து விட்ட​னர். 

"நிமிர்ந்த நன்​ந​டை​யும், நேர்​கொண்ட பார்​வை​யு​மு​டைய' தின​மணி தலை​யங்​கங்​கள் ஒரு வர​லாற்​றுப் பதி​வுப் பெட்ட​கம் செய்​தி​க​ளுக்கு அப்​பா​லும் செய்​தி​க​ளின் பாசாங்​கு​க​ளை​யும் வெளிச்​சம் போட்டு உல​குக்கு உரைக்​கும் ஞாயிறு பத்​தி​ரி​கை​யில் நான் முத​லில் படிப்​பது தமிழ்​ம​ணி​யும் குறிப்​பா​கக் கலா ரசி​க​னின் கட்டுரை கடை​சி​யில் வரும்  புதுக் கவி​தை​யைக் குறைந்​தது மூன்று முறை படிப்​பேன்.  தமி​ழில் மத்​திய மாநில அரசு பணிக்​கான தேர்​வு​கள் எழுத வேண்​டு​மென்று நினைப்​ப​வர்​கள் ஆடம்​ப​ரம் இல்​லாத நடு​நிலை செய்தி​க​ளைப் படிக்க வேண்​டு​மென்று நினைப்​ப​வர்​கள் தேர்வு தின​ம​ணி​யாக மட்டுமே இருக்க முடி​யும். புத்​த​கம் வாங்க ஆர்​வ​முள்​ள​வர்​கள் தவிர்க்க முடி​யா​தது திங்​கள் தின​மணி. 

கட்டு​ரை​யா​ளர்: சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்,
மூத்த ​வ​ழக்​கு​ரை​ஞர், தென்​காசி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.