சிறு வயதிலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆர்வம் உண்டு. அப்பொழுது வாரப்பத்திரிகைகளான ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கல்கண்டு, மாத பத்திரிகைளான கலைமகள், மஞ்சரி, சிறுவர் பத்திரிகைகளான அம்புலி மாமா, கண்ணன் மற்றும் மாயாவி (கலர் வண்ணப்படக் கதைப் புத்தகம்) என ஒன்று விடாமல் படிப்பேன். பள்ளியில் எனது மறக்க முடியாத தலைமையாசிரியர் அ.சுப்பிரமணிய ஐயர் ஏற்படுத்திய மாணவர் படிப்பகத்தில் தினமணியும் ஏனைய தமிழ் தினசரிகளையும் படிப்பேன். இளமையில் படித்த அந்த விஷயங்கள் தான் இன்றைய எனது கட்டுரைகளின் விவர நீருற்று என்றால் மிகையாகாது.