அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரொட்டி வடிவில் இறைவன்..!

நாட்டின் விடுதலைப் புரட்சி இயக்கம் தீவிரமடைந்திருந்த நேரம். மகாத்மா காந்திஜியும், கவியரசி சரோஜினி தேவியும் வேறு பல காங்கிரஸ் தொண்டர்களும் அலிகார் சிறை. ஒருநாள் மாலைப் பொழுது.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 12:30 am

உ.இராமநாதன்

நாட்டின் விடுதலைப் புரட்சி இயக்கம் தீவிரமடைந்திருந்த நேரம். மகாத்மா காந்திஜியும், கவியரசி சரோஜினி தேவியும் வேறு பல காங்கிரஸ் தொண்டர்களும் அலிகார் சிறை. ஒருநாள் மாலைப் பொழுது. "உலகப் புகழ்ப் பெற்ற சிந்தனையாளர்கள், பேச்சாளர்களின் கருத்துகள் சிலவற்றை நான் கூறுவேன். அவை யாருடையது என்று நீங்கள் கூற வேண்டும்'' என்று காந்திஜியிடம் சரோஜினி தேவி கேட்டுக் கொண்டார்.

பல்வேறு பொன்மொழிகளை சரோஜினி அம்மையார் சொல்லிக் கொண்டே வர, அதை கூறியவர்களின் பெயர்களை காந்திஜி சரியாகத் தெரிவித்துவந்தார்.

கடைசியாக, "ஆண்டவன் ஏழைகளுக்கு ரொட்டி வடிவில் காட்சி அளிக்கிறான் ! என்ற சிந்தனைமிகு பொன்மொழி யாருடையது'' கேட்டார் .

காந்திஜி மௌனம் சாதித்தார்.  பின்னர் சரோஜினி தேவி அன்பான புன்சிரிப்புடன் காந்திஜியை நோக்கி, ""உலகத்தைக் கவர்ந்த இந்த உயர்ந்த சிந்தனை எங்கள் பாரதத் தேசத் தந்தை காந்திஜி உடையதாகும்'' என்று மகிழ்ச்சிப் பொங்கச் சொன்னார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.