திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மகிழ்ச்சியான நாடு பூட்டான்

உலக மக்கள் விரும்பும் சுற்றுலாத் தலமாக,  பூட்டான் நாடு இருக்கிறது.  உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இதுவும் ஒன்று.இந்த பூட்டானின் சிறப்புகள் என்ன?

News image
Updated On :10 ஜூன் 2023, 6:30 pm

உலக மக்கள் விரும்பும் சுற்றுலாத் தலமாக,  பூட்டான் நாடு இருக்கிறது.  உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இதுவும் ஒன்று.இந்த பூட்டானின் சிறப்புகள் என்ன?

இமயமலை சாரலின் கிழக்கு எல்லையில் உள்ளது. சிக்கிம் நேபாளத்தை பூட்டான் பிரிக்கிறது.  இதன் தலைநகரம் திம்பு.

"பரோ' என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது.  சர்வதேச விமான நிலையம்தான். ஆனால் ஆபத்தானது.  இந்த விமான நிலையத்தை அடைய பயிற்சி வேண்டும். அதனால் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். இப்படி இயக்குவதற்கு, 8 விமானிகளுக்கு மட்டுமே தகுதி உண்டு. பகல் வெளிச்சத்தில் மட்டுமே விமானங்கள் இயக்க அனுமதி உண்டு.

பல வண்ண மரங்கள் கலப்புடன் வீடுகள், கட்டடங்களைக் காணலாம். எல்லாவற்றிலும் பூட்டான் கலாசாரம் பிரதிபலிக்கும்.  திம்புவில் கூட "டிராபிக் லைட்ஸ்' கிடையாது. போலீஸாரே வாகனங்களை நிறுத்தி, அனுப்பி சமாளிக்கின்றனர்.

புகை பாதிப்பு அறவே இல்லாத நாடுகளில் பூட்டானும் ஒன்று. பூட்டான் மக்கள் தங்களது நாட்டின் பாரம்பரிய உடைகளையே அணிவர். பெண்கள் அணிவது கிரா. ஆண்கள் அணிவது கோ.

அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடைகளுக்கே முக்கியத்துவம்.  

மிருகங்கள், பறவைகளைக் கொல்லத்  தடை  உண்டு.  வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் மாமிசத்தையே பூட்டான் நாட்டு மக்கள் சாப்பிடுகின்றனர். 

குற்றங்கள் மிகவும் குறைவு என்பதால், மக்கள் பயமில்லாமல் வெளியே பயணிக்கின்றனர்.  மடாலயங்கள் வழியெங்கும் உண்டு. பிரார்த்தனைக் கொடிகள் வண்ணமயமாகப் பறப்பதைக் காணலாம்.

இந்த நாட்டில் 87 சதவீதம் பேர் கைப்பேசியை பயன்படுத்துகின்றனர்.  இலையுதிர் காலம், வசந்த காலம் சுற்றுப்பயணத்துக்கு மிகவும் சிறந்தது. 

யாக் விலங்கு, மலை முகடுகள், பள்ளத்தாக்கு, பனிபடர்ந்த மலைகள் ... போன்றவைதான் பூட்டானின் அழகு.

இளம் ஜனநாயக நாடு. ரால்ப்பிட்ச் என்ற ஆங்கிலேய வியாபாரிதான் இந்த நாட்டுக்குப் பெயர் சூட்டினார்.

இந்தியா, சீன நாடுகளுக்கு இடையே பூட்டானுக்கு நல்லுறவு இருந்தாலும், ராணுவ உறவு இந்தியாவோடுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.