ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தோடி ராகம் பாடவா..?

கச்சேரி ஒன்றில் வாசித்துகொண்டிருந்தார் நாகசுவர கலைஞர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை அசர வைத்தார் பெட்ரோமாக்ஸ் லைட் பிடிக்கும் பணியாளர் ஒருவர்.  

News image
Updated On :19 நவம்பர் 2023, 12:00 am IST

கச்சேரி ஒன்றில் வாசித்துகொண்டிருந்தார் நாகசுவர கலைஞர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை அசர வைத்தார் பெட்ரோமாக்ஸ் லைட் பிடிக்கும் பணியாளர் ஒருவர்.
சில ராகங்களை இசைத்துவிட்டு சீவாளியை சரி செய்தவுடன், தோடியில் பாட ராஜரத்தினம்பிள்ளை பல்லவியை எடுத்தார். அப்போது ""சபாஷ்' என்றொரு குரல் கேட்டது.
அங்கே நின்ற பெட்ரோமாக்ஸ் லைட் பணியாளர் தூக்கும் ஒருவனிடம், ""யார் நீயா.. சபாஷ் போட்டது..'' என்றார். அந்த நபரும் பணிவோடு, ""ஆமாங்க ஐயா'' என்றார்.
""ஏன் அப்படி சொன்னாய்'' என்று ராஜரத்தினம் பிள்ளை கேட்டார்.
""தோடியில் வாசிக்கப் போறீங்களே. அதற்காகதான்'' என்றார் பணியாளர்.
""தோடி உங்களுக்குத் தெரியுமா?'' என்றார் பிள்ளை.
""உங்கள் கச்சேரிக்கு எல்லாம் வந்து லைட் தூக்கி, தூக்கி எனக்கு ராகங்களின் பெயர் பழகிவிட்டது ஐயா..'' என்று கூறி, விசில் மூலம் தோடியை பாடியும் காட்டினார் அந்தப் பணியாளர்.
கேட்டதும் அசந்துவிட்டார் ராஜரத்தினம் பிள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.