பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சேரா! உன்னாடு பொன்னாடு!

ஒளவையார் பாடிய தனிப்பாடலுள் ஒன்று

News image
Updated On :19 அக்டோபர் 2014, 6:06 am IST

ஒளவையார் பாடிய தனிப்பாடலுள் ஒன்று,

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்

சுரப்புஆடு யான்கேட்கப் பொன்ஆடு

ஒன்று ஈந்தான்

இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்

தாம்அறிவார் தம்கொடையின் சீர்!

என்பது. "தான் தங்கிய இல்லத்தார் வறுமையில் இருப்பதை அறிந்த ஒளவையார், தனக்கு விருந்தளித்த அவ்வில்லத்தாருக்கு அவர் வறுமையைப் போக்க அந்நாட்டு மன்னனிடம் ஓர் ஆட்டைப் பெற்றுக்கொடுத்தால், அவர்கள் அதை வைத்து தங்கள் வறுமையைப் போக்கிக்கொள்வர்' என்று எண்ணினார். உடனே மன்னனிடம் சென்றார்.

÷""தலையிலே மணிமுடி சூடிக்கொண்டிருக்கும் சேர மன்னா! பால் தரும் ஆடு ஒன்று வேண்டும்'' என்று கேட்டார். இரந்தோர்க்கு பொன்னும் பொருளும் வாரி வழங்கும் அச்சேர மன்னன், கேட்பது தமிழ்ப் புலவர் என்பதை அறிந்தான். புலவருக்குச் சாதாரண ஆட்டைப் பரிசாகக் கொடுப்பதா? அவர் வறுமையைப் போக்க பொன்னாலான ஆட்டைப் பரிசாகக் கொடுப்பதே தமக்கும், தமிழுக்கும் பெருமை என்றெண்ணி, பொன்னால் செய்யப்பட்ட ஆடு ஒன்றை ஒளவைக்குப் பரிசளித்தான்.

÷இரந்தோர் கேட்பதை கேட்டாலும், கொடுப்பவர் தமக்குப் பெருமை தரும்படி கொடுப்பதே ஈகையின் சிறப்பு என்பர் சான்றோர். அப்படிச் செய்த மன்னனை, பரிசில் பெற்ற ஒளவையார், "சேரா உன்னாடு பொன்னாடு' என்று இருபொருள்படப் பாராட்டினார். இச்சொற்றொடர், ""சேர மன்னா! உன் ஆடு பொன் ஆடு'' என்று ஒரு பொருளும், ""சேர மன்னா! உன் நாடு பொன் நாடு'' என்று மற்றொரு பொருளும் கொடுப்பதான தொடர்.

இதிலிருந்து சேர மன்னனின் ஈகை உள்ளத்தையும், பொன் விளைவது போன்ற வளம் மிகுந்த பூமி சேர பூமி என்பதையும் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.