ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பழமொழி நானூறு

தீய செயல்களைச் செய்வதற்குச் சிறிதும் அஞ்சாதவர்களாக, தம்மைக் காத்துப் பேணுபவரைப்போல ஒருவர் சொன்ன பொய்களையும், கோள் பேச்சுக்களையும் நம்பாமல், அப்படித் தம்மை ஏய்ப்பவர்களின் முன்னிலையிலேயே அவர்

News image
Updated On :13 மார்ச் 2021, 6:30 pm


தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை ஏய்ப்பார்முன்
சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
வில்லோடு காக்கையே போன்று. (பாடல்-193)


தீய செயல்களைச் செய்வதற்குச் சிறிதும் அஞ்சாதவர்களாக, தம்மைக் காத்துப் பேணுபவரைப்போல ஒருவர் சொன்ன பொய்களையும், கோள் பேச்சுக்களையும் நம்பாமல், அப்படித் தம்மை ஏய்ப்பவர்களின் முன்னிலையிலேயே அவர் சொல்லோடு மனம் ஒன்றாதவர்களாகக் கொஞ்சமும் மனத்தளர்ச்சியின்றி, விட்டொழித்து விடுபவரே அறிவுடையவர். அதுவே, நெல்லைத் தின்ன வரும் காகம், காவலர் கையில் இருக்கும் வில்லைப் பார்த்து ஓடிப்போகும் அறிவுள்ள செயல் போன்றதாகும். "வில்லோடு காக்கையே போன்று' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.