சங்க காலப்புலவர்களின் போராட்டக்கள விறுவிறுப்பை என்னென்பது ?
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன். பொருள் (756)
என்ற குறளில் வள்ளுவர் அரசுக்கான வரிப் பொருள் பற்றிக் கூறினாலும், அவ்வரி விதிப்பின் பாதிப்பைப் பற்றிக் கூறும்போது,
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)
நீதி வழங்கும் மன்னன் குடிகளை வருத்தி வரிவாங்குதல் என்பது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமமாகும் என்றது சிந்தனைக்குரியதாகும்.
பல்வேறு கோரிக்கைகளால் இந்நாளில் வேளாண் மாந்தர்கள் ஆங்காங்கே போராடும் வேளையில், அவர்களது போராட்டம் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, ஆளும் ஆட்சிக்கான வெற்றி முரசு கொட்ட முடியாது என்பதையும் வள்ளுவர் குறிப்பாக இடனறிதல் என்ற அதிகாரத்தின் குறளால் கூறுவதாக உள்ளதை எண்ணிப் பார்ப்பதும் குறளின் நடப்பியலை நினைப்பிப்பதாக உள்ளனது.
சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது. (322)
என்ற குறட்குப் பரிமேலழகர் விசேட உரை கூறுகையில், போராடும் ஆண்மை உடையாரைச் சிறுமை நோக்கி அதாவது எளிமையாய்க் கருதிப் போராட்டத்தை ஒடுக்கினால் போராடுவோர் போராடும் இடத்தைவிட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினர் ஆவர் என்பதால் அரசர்க்குப் பெரும்படை உடையுமாம் என்ற எச்சரிக்கை எழுத்து நீள நினைப்பிற்குரியதாம் என்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை பாதுகாக்க முன்வரும் ஆனந்த் அம்பானி!

15.4.1976: வள்ளுவர் கோட்டம்: இன்று ராஷ்டிரபதி திறந்து வைக்கிறார்

வள்ளுவரின் புகழ்பாடும் கோயில்...
தினப்பலன்கள் - துலாம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

