காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உடம்பின் பயன் நல்வினை செய்தல்

கரும்பை ஆலையிலே வைத்து நசுக்கி வெல்லக் கட்டியினை முற்காலத்திலே எடுத்துக் கொண்டவர்கள், பின்னர் அதன் சக்கையாகிய துரும்பு நெருப்பிலே பொருந்தி வேகும்போது, அவ்விடத்தே அதைக் கண்டு, கொஞ்சமும் துயரப்பட மாட்டார்கள்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 4:58 pm

தினமணி செய்திச் சேவை

கரும்பாட்டிக், கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேங்கால் துயராண்டு உழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார், கூற்றம்

வருங்காற் பரிவது இலர்.

(பாடல் 35 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)

கரும்பை ஆலையிலே வைத்து நசுக்கி வெல்லக் கட்டியினை முற்காலத்திலே எடுத்துக் கொண்டவர்கள், பின்னர் அதன் சக்கையாகிய துரும்பு நெருப்பிலே பொருந்தி வேகும்போது, அவ்விடத்தே அதைக் கண்டு, கொஞ்சமும் துயரப்பட மாட்டார்கள். அது போலவே, உடம்பினை இச்சைகளுக்கு ஆட்படாமல் வருத்தி, உடம்பினாலாகும் உண்மைப் பயனான அறநெறிகளைக் கைக்கொண்டவர்கள், கூற்றமானது தம்மீது வருகின்ற காலத்திலே, உடம்பை விடுவது குறித்து வருத்தம் அடையமாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.