இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நல்லோரின் நட்பு!

மனிதர்கள் தங்களுக்குள் உண்டாக்கிக்கொள்ளக் கூடிய நட்பிற்கு இஸ்லாம் மார்க்கம் அதிக மதிப்பளிக்கிறது.

News image
Updated On :9 மே 2013, 10:52 am

ஜி. அஹ்மது

மனிதர்கள் தங்களுக்குள் உண்டாக்கிக்கொள்ளக் கூடிய நட்பிற்கு இஸ்லாம் மார்க்கம் அதிக மதிப்பளிக்கிறது. சிரித்து மகிழவும், வீண் விளையாட்டில் பொழுதைக் கழிக்கவும் மட்டுமே நட்பு என்ற சொல் பொருளாகாது. நட்பு என்பது ஓர் உன்னதமான செயலாகும்.

ஒவ்வொரு மனிதருக்கும் நண்பர்கள் இருப்பது போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நண்பர்கள் இருந்தனர். நபிகளாருடன் சேர்ந்தே இருப்பவர்களை "ஸஹாபாக்கள்' (நபித்தோழர்கள்) என்று அழைத்தனர்.

நபிகளாருக்கு பின் இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாவாக (ஜனாதிபதி) அமர்த்தப்பட்டவர் நபிகளாரின் உற்ற நண்பராகிய அபூபக்கர் (ரலி) அவர்களே ஆவார்.

நட்புக்கு அழகிய முன் மாதிரியாக இருப்பவர் யார் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளதைக் காண்போம்.

"'நல்ல நண்பருக்கு எடுத்துக்காட்டு கஸ்தூரி விற்பவரைப் போன்றவராவார். உமக்கு அதைத் தரலாம் அல்லது அவரிடம் அதை நீர் வாங்கலாம். அல்லது அவரிடமிருந்து நறுமணத்தையேனும் நீர் பெறலாம். கெட்ட நண்பருக்கு எடுத்துக்காட்டு இரும்புப் பட்டறையில் நெருப்பை ஊதுபவர் போன்றவராவார். உமது ஆடையை அவர் எரித்து விடலாம் அல்லது அவரிடமிருந்து துர்வாடையையாவது அடைந்தே தீருவீர் (நூல்:புகாரி, எண்: 2110, முஸ்லிம்: எண்: 5124)''.

இரு சகோதரர்கள் சந்தித்துக்கொண்டால், ஸலாம் கூறுவதையும், "முஸô ஃபஹா' (கை கொடுத்தல்), "முஆனகா' (அணைத்துக் கொள்வது) செய்வதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதனால் நண்பர்களுக்கிடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும்.

நீங்கள் வளமாக இருக்கும்போது உங்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் நீங்கள் வறுமையாக இருக்கும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் புரிந்துகொள்ளலாம். நட்புக்கு பணம், பதவி, செல்வாக்கு போன்ற மேல் பூச்சு தேவை இல்லை.

நபிகளார் பல நேரங்களில் தமது தோழர்களின் பண்பினையும், அவர்களது செயல்பாடுகளையும் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். அதுபோல், அவர்களது தவறுகளை நேருக்கு நேர் கண்டித்து, திருந்திக்கொள்ள வழி வகுத்துத் தந்துள்ளார்கள்.

நமக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால், நம்மிடம் நட்பு வைத்திருப்பதை பெருமையாக எண்ணி மகிழ்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையே மிக மிக முக்கியம்.

நமக்கும் நல்லோர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் வெற்றி கிடைக்க இறைவன் நல்லருள் புரிவானாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.